Thursday, April 23, 2009

திவ்யாவின் மேசையிலிருந்து....

ஒரு சிந்தனை

சில நாட்களின் முன் என் சகோதரியின் வீட்டுக்குப் போயிருந்தேன்.அவவினது மகளின் (13 வயது) அறைக்கு என் சகோதரி சொன்ன ஏதோ ஒரு காரணம் நிமித்தம் போக வேண்டி இருந்தது.சாத்தப் பட்டிருந்த அவரது அறைக் கதவில் 'இது இளவரசியினது அறை; வரும் போது கதவைத் தட்டி அனுமதி கேட்கவும்'என்ற இள ஊதா நிறத்தில் எழுதப் பட்ட வாசகம் தென்பட்டது.நான் சென்றிருந்த நேரம் அவர் இருக்க வில்லை.அதனால் தைரியமாகக் கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்தேன்.

அறை மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப் பட்டிருந்தது.புத்தகங்கள் அதனதன் இடங்களில் அமர்ந்திருந்தன.படுக்கை விரிப்புகள் படுத்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல் விரிப்புகள் ஒழுங்காக விரிக்கப் பட்டிருந்தன.மேற்சுவரில் இள நீல நிறத்தில் முகில் கூட்டங்களும் வெண்ணிலாப் படமும் ஒட்டப் பட்டிருந்தது.மேசையோடு போடப் பட்டிருந்த கண்ணாடி அலுமாரியில் அவர் பெற்றுக் கொண்ட பாடசாலைப் பரிசுகள் வரிசைக் கிரமமாக அடுக்கப் பட்டிருந்தன.அருகோடு இருந்த அவரது அலுமாரியிலும், பக்கச் சுவர்களிலும் அவரது நண்பர்களோடு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பெற்றோரோடு சுற்றுலா போன போதும் எடுத்த புகைப்படங்களும் ஒட்டப் பட்டிருந்தன.

சட்டென்று வேறொரு உலகம் கண்ணில் பட்டது.முற்றிலும் வேறானதொரு உலகமாக அது இருந்தது.அவர் உருவாக்கியிருந்த உலகமது.

தற்செயலாகத் திரும்பிய போது மேசையில் குறையோடு விடப்பட்டிருந்த கொப்பி ஒன்று கண்ணில் பட்டது. அது அவரது சித்திரக் கொப்பி.ஆர்வ மிகுதியால் திறந்து பார்த்தேன். முதல் பக்கம் திவ்யா என்ற தலைப்பில் தன்னைத் தான் வரைந்திருந்தார்.அதன் கீழ் ஒரு வாசகம் காணப் பட்டது.அது,

"YOU ARE IN THIS WORLD TO SING YOUR OWN SONG"

அதன் பின் அங்கு நிற்கத் தோன்றவில்லை எனக்கு.

No comments:

Post a Comment