Saturday, January 14, 2012

படித்ததில் பிடித்தது


படத்துக்குக் கீழே இருக்கின்ற தலைப்பை அழுத்தி சிறுகதையை வாசித்துப் பாருங்கள்.



எனக்குப் பயமாய்க்கிடக்குது – ஈழத்து சிறுகதை

4 comments:

  1. அவுஸ்திரேலியா வாழ் தமிழ் உணர்வாளர்கள் உங்களைக் கண்டால் கதை கந்தல்.... துரோகியாக்கி விடுவார்கள். தைப்பொங்கலுக்கு யாழ்ப்பாணத்தில் எங்கேயோ டக்லஸ் தேவானந்தா மாட்டுச் சவாரி போட்டியை தொடக்கி வைத்தாராம். யோ. கர்ணன் அதை தனது முகநூலில் நிலைச் செய்தியாக போட்டு பிறகு பின்னூட்டமாக “துரோகி மாடுகள்” என்று கிண்டல் பண்ணியிருந்தான். இதை வாசித்தால் “மணிமேகலாவின் அட்சய பாத்திரத்திலிருந்து துரோகிகள் தினமும் பெருகுகிறார்கள்” என்று தமி்ழ் உணர்வாளர்களை கிண்டல் பண்ணுவான். அவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இனி தங்கள் பருப்பு வேகாது என்று அவர்கள் அறியப் போவதேயில்லை. வாயிலிருந்து நுரை தள்ள அவர்கள் கத்துவதை கேட்க எரிச்சலாக இருக்கிறது.

    ReplyDelete
  2. ?.....??............

    நீங்கள் அங்கும் சரி இங்கும் சரி போகாதிருந்தால் எல்லோருடய எரிச்சலும் இல்லாது போய் விடும்.

    இந்தக் கதை ஓரு போருக்குப் பின்னான சமூகத்தில் ஒரு பாதிக்கப் பட்ட பெண்ணின் வாழ்வை காய்தல் உவத்தல் இன்றி; யாரிலும் எந்தப் பிழையும் காணாமல் அல்லது சொல்லாமல்; யதார்த்தத்தை சமூகக் கரிசனையோடு மனிதாபிமானத்தில் ஊறிய உன்னத எழுத்துக்களால் முன் வைக்கிறது.

    அந்த உன்னதத்தை உங்கள் சம்பந்தமில்லாத கருத்துக்களால் களங்கப் படுத்தாதீர்கள். தயவு செய்து!

    ReplyDelete
  3. கோபப்படுவதற்கு தெம்பு, பலம் மட்டுமல்ல உரிமையும் கூட வேண்டும். //

    க‌தையின் க‌டைசிப் ப‌த்தி ம‌ன‌சை உறைய‌ வைத்த‌து. 'ந‌ரி இட‌ம் போனால் என்ன‌ வ‌ல‌ம் போனாலென்ன‌; மேலே விழுந்து பிடுங்காமலிருந்தால் ச‌ரி' என‌ எல்லோரும் போக‌, 'நாயை எங்கே அடித்தாலும் காலில் நொண்டுவ‌து போல்' பெண் சென்ம‌ங்க‌ளுக்கு தான் எக்கால‌மும் இம்சை.

    ReplyDelete
  4. //பெண் சென்ம‌ங்க‌ளுக்கு தான் எக்கால‌மும் இம்சை.//

    அதிலும் போருக்குப் பின் சமூகத்தை எதிர்கொள்ளும் இளம் விதவைகளின் நிலையைச் சொல்லில் அடக்க முடியாது நிலா.

    சுய வாழ்வின் நிதர்சனங்களை எதிர் கொள்வதைவிட சமூகம் காட்டும் நிஜ முகம் தான் கூடுதல் அதிர்ச்சி அளிப்பது!!

    ReplyDelete