Friday, February 21, 2014

இலக்கிய சந்திப்பு - 17 -


இனிய இலக்கிய உள்ளங்களே!


எல்லோரும் நலம் தானா?

புது வருட பொங்கல் வாழ்த்துக்கள் சகலருக்குமானதாக மலர்க! 2014 கலை இலக்கிய படைப்பாளிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் சுபீட்சமான ஆண்டாக பரிணமிப்பதாக!

ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்கள் எல்லோருடனும் முதலில் பகிர்ந்து கொள்ளப் பிரியப்படுகிறேன். அது நம் இலக்கிய சந்திப்பின் அங்கத்தவர் திரு. சத்திய நாதன் அவர்களுக்கு “அவுஸ்திரேலியா பலகதைகள்” சிறுகதைப் போட்டியில் ”விண்னைத்தாண்டி வருவேனே” என்ற அவரது சிறுகதை மூன்றாம் பரிசினை வென்றிருக்கிறது. 

பேருவகையோடு அந்த மகிழ்வை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுகின்ற அதே வேளை அவருக்கு நம் உயர்திணையின் இலக்கிய சந்திப்பின் சார்பாக நம் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்ந்த்துக்களையும் சொரிந்து மகிழ்கிறோம். மேலும் மேலும் நாம் வாழும் நிலம் சர்ந்தும் வாழ்வு சார்ந்தும் இலக்கியம் பல பூப்பதாக!

அத்தோடு இன்னொரு தகவல். மார்ச் மாதம் 22ம் திகதி எழுத்தாளர் விழா குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நடக்க ஏற்பாடாகி இருப்பதாக அறிகிறேன். அந் நிகழ்வுக்காக மெல்போர்ன் மாநிலத்தில் இருந்து செல்லும் ஜனரஞ்சக எழுத்தாளுமை கொண்ட எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் செல்வதாகவும் திரும்பி வரும் போது சிட்னிக்கு வருவதாகவும் அறிந்து மகிழ்ந்தோம். அவரை நம் மார்ச் மாத இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த போது மிக்க பேரன்போடு வர உறுதி அளித்துள்ளார் என்ற செய்தியையும் உங்கள் எல்லோரோடும் பகிர்ந்து கொள்வதில் மனம் பெரிதும் மகிழ்கிறது.

கடந்த மார்கழியில் தவிர்க்க முடியாது பிற்போடப்பட்டிருந்த நம் இலக்கிய சந்திப்பு மேலும் தைத்திங்களில் 26.1.14 அன்று அவுஸ்திரேலிய தினம் காரணமாகவும் நாம் கூடும் பூங்கா அவுஸ்திரேலிய தினத்தால் களை கட்டி இருந்ததன் காரணமாகவும் பாடசாலை விடுமுறை காரணமாகவும் மேலும் ஒரு மாதம் பிற்போடப்பட்டு இம்மாதம் முதலாவதாக நடந்தேற இருக்கிறது.

பலரும் இயற்கை சார்ந்த மூலிகை வாசம் சுமந்து வரும் தென்றல் வருட குருவிகளின் இசைப்பின்னணியில் இலக்கியம் பேசவே பிரியப்படுவதால் தொடர்ந்தும் நம் நிகழ்வுகள் – கட்டிட வசதிகள் இருக்கின்ற பொழுதிலும் – பூங்காவிலேயே இடம் பெறும்.

இம்மாதம் கடந்த மார்கழித்திங்கள் நடைபெறுவதாக இருந்து பிற்போடப்பட்ட நாம் அகத்திய குறுமுனி என நாம் வாஞ்சையோடு அழைக்கும் இலக்கியத்தால் அழகுறும் திரு தனபாலசிங்கம் அவர்களின் சிறப்புரையோடு ஆரம்பமாகிறது.

உங்கள் எல்லோருடய பிரசன்னமும் நிகழ்ச்சியை அழகுறுத்தும் என நான் சொல்லவேண்டியதில்லை.

வந்து இயற்கையோடு இணைந்து இலக்கியமும் நுகர்ந்து செல்க!

உயர்திணை உங்கள் எல்லோரையும் அன்போடு வருக வருக என உள்ளன்போடு அழைக்கிறது. மேலதிக விபரங்களை அழைப்பிதழில் காண்க!

நன்றி.

தமிழால் இணைந்திருப்போம்.

7 comments:

  1. தகவல் பலருக்கும் உதவும்...

    திரு. சத்திய நாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்
    நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. இலக்கிய சந்திப்பின் அங்கத்தவர் திரு. சத்திய நாதன் அவர்களுக்கு “அவுஸ்திரேலியா பலகதைகள்” சிறுகதைப் போட்டியில் ”விண்னைத்தாண்டி வருவேனே” என்ற அவரது சிறுகதை மூன்றாம் பரிசினை வென்றிருக்கிறது.
    வாழ்த்துகள்..!

    ReplyDelete
  4. தங்களது இலக்கிய விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வந்து வாழ்த்தும் பகிர்வும் தந்து நம்மை மகிழ்வித்த அனைத்து உள்ளங்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி.

    இந்தப் பதிவை திரு சத்தியநாதன் அவர்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். அவர் பெரிதும் மகிழ்வார் என்பது நிச்சயம்.

    இலக்கிய நெஞ்சங்களுக்கு பன்னீர் தெளித்து சந்தனம் வைத்தீர்கள்.

    அந்த அன்பினிற்கு கரம் குவித்து சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    அகம் மலர்ந்தது உங்களால்! நெகிழ்ந்து நன்றியால் கனிந்தது நெஞ்சம்!!

    ReplyDelete
  6. உயர்திணை இலக்கியச் சந்திப்பு இனிதே நடைபெற நல்வாழ்த்துக்கள். அவுஸ்திரேலியா பலகதைகள் போட்டியில் பரிசு பெற்ற திரு. சத்தியநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  7. மிக்க மகிழ்ச்சி கீதா.

    நேற்றய தின சந்திப்பின் பின்பான முதல் காலை இது.

    சந்திப்பில் சங்ககாலத்து ஒளவையை நமக்கு முன்னால் நிப்பாட்டி அவவை நமக்கு அறிமுகப்படுத்தி விட்டுப் போனார்.

    நாங்கள் அக்காலத்துக்குள் நுழைந்து சங்ககாலத்துப் பெண்ணின் திறத்தை - ஒளவையின் மிடுக்கார்ந்த சுதந்திரப் பெண்மையின் கம்பீரத்தை -வியந்து பார்த்து பொறாமை கொண்டோம்.

    அந்த பகிர்வின் அனுபவத்தைச் சொல்ல என் தமிழுக்கு சத்தியமாய் சமர்த்தியம் போதாது. அதனால் அங்கு சமூகமளித்திருந்த நம் நாட்டியகலாநிதி கார்த்திகா.கணேசரிடம் அது பற்றி எழுதித்தரக் கேட்டிருக்கிறேன்.

    கீதா,நம்மிடையே இருக்கிற பெரு நிதி இந்தக் குறுமுனி தனா.

    ReplyDelete