Thursday, October 2, 2014

பூப்பூவா பூத்திருக்கு.....

பூமியிலே ஆயிரம் பூ!

பூவிலே சிறந்த பூ என்ன பூ?

அன்’பூ’ என சொல்கிறது ஒரு பாடல்.

கடந்த வார இறுதியில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பு 21 இல் கீத மஞ்சரி இந்தப் பூக்களைப் பார்த்து விட்டு அவரது பதிவொன்றில் ஒருவர் பார்க்க பார்க்கச் சலிக்காதவை என்ற தலைப்பில் குழந்தைகள், பூக்கள், கடல் அலை, யானை, ........, என்று குறிப்பிட்டிருந்ததாகக் கூறினா.

பார்க்க பார்க்க சலிக்காதவை என்ற சொல்லுக்கும் அழகு என்ற சொல்லுக்கும் தூரம் அதிகமில்லை தானே?

அழகு என்ற தலைப்பினை நினைத்தவுடன் எனக்கு அழகு என்று தெரிவது யாது என்று யோசித்துப் பார்த்தேன். புறத்தோற்றத்தை விட அகம் சார்ந்து தெரிகிற குணாம்சங்கள் தான் எனக்கு பேரழகாகத் தோன்றுகிறது.

தாய்மையான குணாம்சம், குழந்தையின் மழலை, முதிர்ந்த புன்னகை, உறுதியான இயல்பு, இக்கட்டான வேளையில் நீளும் ஆதரவுக் கரங்கள்... இப்படியாக.

இப்போது இதனை பதிகையில் ஆழியாழ் (நம் கன்பராக் கவிஞை) எழுதிய ’!’ என்ற தலைப்பிட்ட கவிதை நினைவுக்கு வருகிறது. அது இப்படி நீளும்.

“!”

நட்டாழக் கடலின் அமைதி
நிரபராதிகளைக் காப்பாற்றும் சட்டங்கள்
உண்மையைப் பதிவு செய்யும் புகைப்படங்கள்
முறுவல் பூத்தபடி நடமாடும் இளவரசி
குழந்தைகளுக்கு வழிகாட்டும் பாதிரிகள்
சுயநலமற்ற தாய்மை
ஆண்கள்

உங்களுக்கு  சலிக்காதிருக்கிற அழகு எது?

கடந்த வாரம் 28.9.2014 பரமற்ரா பார்க் (Parramatta Park) இப்படித் தோற்றமளித்தது.

( மேலும் சில படங்களை இலக்கிய சந்திப்பு பற்றி எழுதும் போது பதிவிடுவதற்காகச் சேகரித்து வைத்திருக்கிறேன். அவை விரைவில் வெளிவரும்)














































































(படப்பிடிப்பு - யசோதா) (28.9.14)