Thursday, April 21, 2016

அங்க மொழியும் ஒரு பாடலும்



பேசுகிற மொழியை விட உடல் மொழிக்கு அதிக பலம் உண்டு என்று மேலைத் தேயக் கலாசாரம் சொல்கிறது. அதன் ஆற்றல்  60% என உடல் மொழி வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.பேசுகிற சொல்லுக்கு அது 40% தத்தினைத் தான் ஒதுக்குகிறது.

இன்றைக்கு நான் ரசித்த பாடல் ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விருப்பமாக இருக்கிறது. இந்தப் பாடல் மாட்டுக்கார வேலன் என்ற திரைப்படத்தில் கே.வீ. மகாதேவனின் இசையமைப்பில் டி.எம். செளந்தரராஜன் எம்.ஜி.ஆர் இற்காகப் பாடி இருக்கிறார்.

பாடல்வரிகள் கண்ணதாசனுக்குச் சொந்தமானவை.

சொற்செட்டை விட்டுக் கொடுக்காத எளிமையான வரிகள்! ஒன்றை ஒன்று தூக்கிக் கொடுக்கும் சொற்களுக்கு நோகாத இசையமைப்பு!! சொற்களில் கரைந்து கரைந்து வரும் அபிநயமாகிப் போன குரல்.

எல்லாவற்றையும் விட பிடித்துப் போன ஒன்று என்னவென்றால் இந்தக் கவிஞன் என்ன மாதிரி காதல் வசப்பட்டிருக்கிற ஒரு பெண்ணின் உடல் மொழியை கவனித்திருக்கிறார் பாருங்கள்!!


ஒருபக்கம் பாக்கிறா
ஒரு கண்ண சாய்க்கிறா
அவ உதட்டக் கடிச்சிக்கிட்டு மெதுவா(க)
சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா  (2)

ஆடய திருத்திறா
அள்ளி அள்ளி சொருகிறா (2)

அர குற வார்த்த சொல்லி
பாதிய முழுங்குறா (2)

பின்னல முன்ன விட்டு
பின்னிப் பின்னி(க்) காட்டுறா

பின்னால தூக்கி விட்டு
கையால இழுக்குறா

பூப்போல காலெடுத்து
பூமிய அளக்குறா

பொட்டொண்டு துள்ளித் துள்ளி
சிட்டாகப் பறக்குறா

நிலையில கைய வச்சு
நிக்கிறா நிமிருறா(2)

நிறுத்தி மூச்சு விட்டு
நெஞ்சத் தாலாட்டுறா
நெஞ்சத் தாலாட்டுறா (ஒரு பக்கம்)

காலால நிலத்தில
கோலம் போட்டுக் காட்டுறா
கம்பி போட்ட ஜன்னலிலே
கன்னத்தத் தேய்க்கிறா (2)

கண்கள மூடி மூடி
ஜாட கொஞ்சம் காட்டுறா
கறந்த பால நான் கொடுத்தா
கையத் தொட்டு வாங்குறா - என்
கையத் தொட்டு வாங்குறா

கை விரல் பட்டதிலே
பால் சொம்பு குலுங்குது
கைய இழுத்துக்கிட்டு
பாலோடு ஒதுங்குது

ஒன்னப் போல எண்ணி எண்ணி
என்கிட்ட மயங்குது (2)

ஒன் முகம் பாத்ததும் தான்
உண்மை எல்லாம் விளங்குது (ஒரு பக்கம்)


பார்க்கின்ற போதோ கேட்கின்ற போதோ ஒரு காதல் வயப்பட்ட பெண் நம்முன்னால் நிற்பது போல ஒரு பிரமை தோன்றுகிறதல்லவா? பாடலை இப்போது கேட்போம்.




No comments:

Post a Comment