Wednesday, April 11, 2018

தெரியாதோ நோக்கு தெரியாதோ.....

இந்தப் பாடல் சூரியகாந்தி திரைப்படத்தில் மனோரமா பாடிய பாடல்.

தெரியாதோ நோக்கு தெரியாதோ....

என்ன செய்வது? சில விடயங்கள் தெரிந்தாலும் வயதுச் சேட்டைகளில் இருந்து தப்பி விட முடிகிறதா என்ன?

இவை எல்லாம் பருவத்தோடு வருகிற இயற்கையான குணங்கள் தானே. இது பற்றி இராமாயணத்திலே ஒரு சுவையான சம்பவம் இருக்கிறது.இராவண வதம் முடிந்து விட்டது. களைப்பும் ஆயாசமுமாக அனுமரின் மடியில் இராமர் துயில் கொண்ட படி இருக்கிறார்.அவர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் போது அனுமார் தன் வாலின் நுனியை எடுத்து தூங்கிக் கொண்டிருக்கிற இராமரின் காதுக்குள் புகுத்தி விட்டார். உடனே துடித்துப் பதைத்து எழுந்த ராமன் ‘என்னம்மா இப்பிடிப் பண்ணிறீங்களேம்மா’ என்ற கணக்காக அனுமரைப் பார்த்து இது என்ன அனுமான்? என்று கேட்க, ”நான் என்ன செய்வேன்? இது என் இயற்கை புத்தி” என்றாராம்.

விவேக சிந்தாமணியிலே ஒரு பாடல் வருகிறது.

”கற்பூர பாத்தி கட்டி கஸ்தூரி எருப் போட்டுக் கமழ் நீர் பாய்ச்சி
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருத்தக் காட்டும்
சொற்போதையர்க்கு அறிவு இங்கு இனிதாக வருமெனவே சொல்லினாலும்
நற்போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும் தானே”

என்கிறது அது.

அது போலத் தான் காதலும் இயற்கையாய் வருவது. அபூர்வமாக வானொலிகளில் ஒலிக்கும் இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். கவிஞர் எப்படி எல்லாம் இந்தக் காதல் சேட்டைகளை எல்லாம் உற்றுக் கவனித்திருக்கிறார் என்பதை பாடல் வழி காணலாம்.



தெரியாதோ நோக்கு தெரியாதோ
Film : சூர்ய காந்தி
singer : manorama
music: MSV
Lyrics : Vaali
song : theriyadho nokku


தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

அவாளவா ஆத்துக்குள்ளே ஆயிரம் இருக்கும்
காதல் ஆரம்பிக்கும் நேரம் முதல் நாடகம் இருக்கும்
தானா சிரிப்பா அவ தனியா நடப்பா
ஏதோ நினைப்பா சும்மா பேசிண்டே இருப்பா

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

பூஜைக்காக போறவம்போல் ஆம்பிளை போவான்
அங்கே பூஜை தேடி பொம்மனாட்டி நேரத்தில் வருவா
சாமியக்கண்டாளா அவ பூஜயக்கண்டாளா
அந்த சாமியக்கண்டாளா அவ பூஜயக்கண்டாளா
வந்த மூர்த்தியக்கண்டாளா பையன் மூஞ்சியக்கண்டாளா

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

படத்த பாத்து பட்ட பாடு நடத்திப்பாக்குறான்
சினிமாபடத்த பாத்து பட்ட பாடு நடத்திப்பாக்குறான்
அவ பழைய கால டூயட் பாட்ட பாடி பாக்கறா
மனமோகனா....
அங்கே வாடுதே கனவெனும் என் மனம்
தரையில் உருள
அவன் தலயைத் தடவுறான்
இவ தரையில் உருளரா
அவன் தலயைத் தடவுறான்
அறையில் நடப்பதை அவ அம்பலமாக்குறா

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ


2 comments:

  1. மிகவும் அருமையான கருத்துள்ள பாடல்

    ReplyDelete
  2. புத்தன்,
    நல்ல அனுபவம் இருக்குப் போல...:)

    ReplyDelete