Monday, August 24, 2020

பின்வருநிலையணி - 8 -

   SBS வானொலியில் நம்ம தமிழ் நிகழ்ச்சியில் ‘பின்வருநிலை அணி பற்றிக் கேட்க இங்கே அழுத்தவும்    

தமிழுக்கும் அமுதென்று பேர்…..


https://www.youtube.com/watch?v=yBjAWU6_938 


இந்தப் பாடல் தமிழ் குறித்து பாரதிதாசன் இயற்றிய கவிதையின் இசைவடிவம் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான் இல்லையா? 

இதிலே பாரதி தாசன் பயன்படுத்தி இருக்கிற அணி என்ன தெரியுமா? 

அது தான் பின்வருநிலைஅணி. பின்வருநிலை அணி என்றால் என்ன? அதற்கு தண்டி அலங்காரம் என்ற இலக்கண நூல் என்ன வரைவிலக்கனம் சொல்கிறது? 

’முன்வரும் சொல்லும் பொருளும் பலவயின்

பின்வரும் என்னில் பின்வரு நிலையே ’ 

என்று அது உரைக்கிறது. 

இந்தப் பாடலிலே தமிழ் என்ற சொல் பல இடங்களில் மீண்டும் மீண்டும் வந்து இருக்கிற போதும் அது தமிழ் என்ற ஒரே பொருளிலே வந்திருக்கிறதல்லவா? அது இந்த அணியின் ஒரு சிறப்பு ஆகும். அது என்ன ’ஒரு’ சிறப்பு? அப்படி என்றால் வேறு சில சிறப்புகளும் உள்ளனவா என்று நீங்கள் கேட்கக்கூடும். ஆம். வேறு சில சிறப்புகளும் அதாவது உட்பிரிவுகளும் இதற்கு உள்ளன. 

இதிலே குறிப்பாக மூன்று வகையான உட்பிரிவுகள் உள்ளன. அதிலே ஒன்று சொல்பின்வருநிலையணி, இரண்டாவது பொருள்பின்வருநிலையணி மூன்றாவது சொல்பொருள் பின்வருநிலையணி. 

என்ன? இவைகளுக்கெல்லாம் என்ன வேறுபாடு என்று கேட்கிறீர்களா? அணியினுடய பெயர் என்னவோ பெரிதாக இருந்தாலும் வேறுபாடு என்னவோ மிகத் தெளிவானதும் எளிமையானதும் தான். 

சொல் பின்வருநிலை அணி என்பது ஒரு சொல் பல இடங்களிலும் ஒரே மாதிரியாக வரும். ஆனால் அது மற்றய இடத்தில் வருகிற போது அதன் சொல் ஒன்றாக இருப்பினும் பொருள் வேறொன்றாக இருக்கும். உதாரணமாக 

`குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்’   (குறள் எண் -965)

அதாவது குன்று போல உயர்ந்தவர்கள் குறுகிய அளவு இழிசெயலைச் செய்து விட்டாலும் அவர்கள் மேன்மை குன்றி விடும் என்று குன்றுதல் என்ற சொல் முதலில்`மலை’ என்ற பொருளிலும் இன்னோர் இடத்தில் `குறைந்துவிடும்’ என்ற பொருளிலும் வள்ளுவன் அமைத்துக் காட்டிய சொல்பின்வருநிலையணியாகும். 

‘காந்தியைப் பார்த்தேன்; அவன் காந்தியைப் பார்த்தேன்’ என்று பாரதியார் தன் பாடலில் ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பார். இப்பாடல் அடியில் முதலில் வருகிற காந்தி என்ற சொல் காந்திமகானையும் அடுத்து வருகிற காந்தி என்ற சொல் வசீகரம் பொருந்திய என்ற அர்த்தம் தரும் காந்தி என்ற பொருளிலும் வந்து ஒரு சொல் இரு வேறு இடங்களில் இருவேறு அர்த்தத்துடன் வெளிப்பட்டுள்ளதல்லவா? இது சொல் பின் வரு நிலை அணியாகும். 

இப்போது கண்ணே கண்ணே என்று கலைவாணர் கூப்பிடும் இந்தப் பாடல் உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?

தங்கமே… தங்கமே……

.தங்கமே தங்கமே பாடல்

https://www.youtube.com/watch?time_continue=2&v=aCehtFHIMak&feature=emb_logo

இசையோடு கலந்து வரும் இந்த நிலாவுக்கு எத்தனை அர்த்தங்கள்?

வான் நிலா நிலா அல்ல….

வான் நிலா நிலா அல்ல பாடல்

https://www.youtube.com/watch?v=uKDtXNrm8vM 

அது சொல்பின்வருநிலையணி.                                                   

அப்படி என்றால் பொருள்பின்வருநிலையணி எதுவாக இருக்கும்? பொருள் பின்வருநிலை அணி என்பது ஒரே பொருளைக் குறிக்கின்ற பல சொற்கள் தொடர்ந்து வருவது போல அமைக்கப்பட்டிருப்பது. அதாவது சொல் வேறுவேறாக இருக்கின்ற போதும் அது குறிக்கின்ற பொருள் ஒன்றாக இருப்பதாக ஒரு பாடல் புனையப்பட்டிருப்பது பொருள்பின்வருநிலையணியாகும். அதற்கு உதாரணமாக இன்னொரு பாரதியார் பாடல் பார்ப்போமா? 

 ‘கண்டேன் வெகுண்டேன் கலக்கமுற்றேன் நெஞ்சில் அனல்

கொண்டேன் குமைந்தேன் குமுறினேன் மெய்வியர்த்தேன்’

என்றுவரும் பாரதியாரின் பாடலடியில் கண்டேன் வெகுண்டேன் கலக்கமுற்றேன் குமைந்தேன் குமுறினேன் மெய்வியர்த்தேன் என்ற சொற்பதங்கள் எல்லாம் மனக்கலக்கத்தினைத் தரும் சொல்லடிகளின் வேறு வேறு மொழிவடிவங்கள் அல்லவா? அவ்வாறு ஒரு பாடலில் ஒரே பொருளைத்தரும் வேறு வேறு சொற்கள் ஒன்றாகி அமையப்பெறும் போது அதில் இடம் பெறும் அணி பொருள்பின்வருநிலை அணியாகும். 

’அவிழ்ந்தன தோன்றி; அலர்ந்தன காயா;

நெகிழ்ந்தன நேர்முகை முல்லை; மகிழ்ந்து இதழ்

விண்டன கொன்றை; விரிந்த கருவிளை;

கொண்டன காந்தள் குலை’

என்ற தண்டியலங்கார ஆசிரியர் தரும் இந்த உதாரண பாடலில் வரும் 'அவிழ்ந்தன' அலர்ந்தன, நெகிழ்ந்தன, இதழ்விண்டன, விரிந்தன, குலைகொண்டன எனும் வெவ்வேறு சொற்கள் ஒரே பொருளில் மீண்டும் மீண்டும் வந்திருக்கிறதல்லவா?. ஆகவே இது பொருள் பின்வருநிலை அணி ஆகும்.

கேட்க இருக்கும் இந்தப் பாடலில் வரும் அன்புக்கு சமனான பொருள் தரும் பாசம் பக்தி கருணை போன்ற பதங்கள் ஒரே பாடலில் ஒரே பொருளைத் தரும் வகையில் புனையப்பட்டிருப்பது சொல்பின்வருநிலையணிக்கு  இசைவடிவிலமைந்த ஓர் உதாரணமாகும்.

அன்பு என்பதே தெய்வமானது…..

அன்பு என்பதே தெய்வமானது பாடல்

https://www.youtube.com/watch?v=jxvBHziR9P4

0.30 – 1.55

மூன்றாவதும் இறுதியானதுமாக அமையப்பெறுவதும்; இன்றய நிகழ்வின் முக்கிய கருவாகவும்; முகப்புப் பாடலுக்கு உதாரணமாகவும் அமையப்பெறும் அணி சொற்பொருள் பின்வருநிலையணியாகும். அதில் என்ன வேறுபாடு இருக்கக் கூடும்?  பெயர் என்னவோ பெரிதாக இருந்தாலும் அதன் பொருள் என்னவோ மிக எளிமையானது தான். கவிஞர் தான் இயற்றும் கவிதையில் ஒரே சொல் பல இடங்களிலும் ஒரே பொருளில் மீண்டும் மீண்டும் வருவது தான் அது.

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க

சொல்லில் பயனிலாச் சொல்.’ 

என்றும் 

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து!’

என்றவாறாக பல திருக்குறள்களை இந்த அணிக்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். அதில் மேலுமொரு உதாரணமாக 

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை     (குறள் : 411)

என்று வள்ளுவர் சொல்வதில் வரும் செல்வம் என்ற சொல் திரும்பத் திரும்ப ஐந்து இடங்களில் ஒரே பொருளில் வந்துள்ளமையைக் காணலாம். 

இப்போது இந்தச் செவிச்செல்வத்தின் மூலமாக சொற்பொருள் பின்வருநிலையணியில் அமைந்த பாடல் ஒன்றை இசையோடு கேட்போமா? 

( சொன்னது நீதானா….)

சொன்னது நீதானா பாடல்

https://www.youtube.com/watch?v=-NCtHKpRP0A

0.00 – 0.29

வள்ளுவர் 5 இடத்தில் வைத்துக் காட்டிய கைவண்ணத்திற்கு கம்பர் என்ன சளைத்தவரா? அவர் தன் இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் 7 இடங்களில் ஏழு என்ற வார்த்தையை வைத்து  செய்த சொல் விளையாட்டு ஒன்று இந்த அணிக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டாகும்.

ஏழு வேலையும், உலகம் மேல் உயர்ந்தன ஏழும்

ஏழு குன்றமும், இருடிகள் எழுவரும், புரவி

ஏழும், மங்கையர் எழுவரும், நடுங்கினர் என்ப-

’ஏழு பெற்றதோ இக் கணைக்கு இலக்கம்?’

என்று வருகிறது அப்பாடல். அதன் பொருள் என்னவென்றால் ஏழு கடல்களும், மேலே உயர்தனவாக உள்ள ஏழு உலகங்களும், ஏழு மலைகளும், ஏழு முனிகளும், சூரியனின் தேரை இழுத்துச் செல்லும் ஏழு குதிரைகளும், ஏழு கன்னியர்களும், இந்த அம்பிற்குக் குறி என்று அஞ்சி நடுங்கினர். இது கம்பன் சொற்பொருள் பின்வருநிலையணியை தன் பாடலில் பொருத்தி செய்து காட்டிய தமிழ் வித்தை.

( நீதானா எனை அழைத்தது நீதானா எனை நினைத்தது நீதானா…)

நீதானா என்னை அழைத்தது பாடல்

https://www.youtube.com/watch?v=F_K6wytvQD4

இப்பாடலில் வரும் நீதானா என்ற சொல்

கட்டோடு குழலாட ஆட...

கட்டோடு குழலாட ஆட பாடல்

https://www.youtube.com/watch?v=9x1zk19PM1c

இதில் வரும் ஆட என்ற சொல்

பூ கொடியின் புன்னகை...

பூ கொடியின் புன்னகை பாடல்

https://www.youtube.com/watch?v=fh4OWnO2pOE&lc=UgxW2MU9Q0DF46MDdYB4AaABAg

இப்பாடலில் வரும் புன்னகை என்ற சொல்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ என்ற பாடலில் வரும் பூ என்ற சொல்

பெண்ணல்ல பெண்ணல்ல பாடல்

https://www.youtube.com/watch?v=amAewEx3MmU 

( அன்பு என்பதே தெய்வமானது…..)

அன்பு என்பதே தெய்வமானது பாடல்

https://www.youtube.com/watch?v=jxvBHziR9P4

0.30 – 1.55

இந்தப்பாடலில் வரும் அன்பு என்ற சொல்

( நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா )

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பாடல்

https://www.youtube.com/watch?v=b7QECUszUa8

0.0 – 0.52 

என்பதில் வரும் ராஜா என்ற சொல்

இவைகள் எல்லாம் சொற்பொருள்பின்வருநிலையணியைப் பயன்படுத்தி திரை இசை தந்த தமிழ் பாடல்களில் சில.

பாரதியார் தன் கவிதைகளில் இந்த அணியினை எப்படி எல்லாம் பயன் படுத்தி இருக்கிறார் பாருங்களேன்! 

பாரதியார் கவிதைகள்

https://www.youtube.com/watch?v=GQtTCVIfQpM

10.7 – 10.58 /  11.11 – 12.33 / 12.43 – 13.37 / 15.7 – 16.58.

நிகழ்ச்சியை நிறைவு செய்யும் நேரம் நெருங்கிவிட்ட இத்தருணத்தில் சொற்பொருள்பின்வருநிலையணியில் இடம்பெற்ற இந்த நாலடியார் பாடலோடு நிகழ்ச்சியை நிறைவு செய்வோமா?

நாலடியார் பாடல்

https://www.youtube.com/watch?v=FmHol1YLrE8 

0.12 – 0.41.

இதனோடு கூடவே வர இருக்கும் இந்த நிறைவுப் பாடலும் குறுகிய நம் வாழ்வை சினிமா என்ற திரைக் கலை இசை வழியாக சொற்பொருள் பின்வருநிலையணியில் இப்படியாக ஒலிக்கிறது. 

டிப்பு டிப்பு டிப்பு டிப்பு குமரி

https://sv-se.facebook.com/763611867102044/videos/812484335548130/ 


           பிரதி ஆக்கம்: யசோதா.பத்மநாதன் 5.8.2020.


No comments:

Post a Comment