tag:blogger.com,1999:blog-5970246057768347279.post4276556883399294008..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: வெத்திலைத் தட்டம்யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-37505368760560699252012-11-05T14:55:23.623+11:302012-11-05T14:55:23.623+11:30மகிழ்ச்சி நண்பரே! கட்டாயம் சென்று பாருங்கள். ஆச்சர...மகிழ்ச்சி நண்பரே! கட்டாயம் சென்று பாருங்கள். ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.இந்தியப் பண்பாட்டுக்குரிய பழங்காலப் பொருட்கள் கூட அங்கே காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன.<br /><br />இடது புறமாக இருக்கின்ற என் விருப்பப் பக்கத்தில் அம் மனிதருடய கடை :) இணைக்கப் பட்டிருக்கிறது. <br /><br />வரவுக்கும் பகிவுக்கும் நன்றி நண்பரே!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-71077297875026561412012-11-05T13:14:50.894+11:302012-11-05T13:14:50.894+11:30அழகான தட்டு...
அந்தக் காலத்தில் எல்லாவற்றையும் ரச...அழகான தட்டு...<br /><br />அந்தக் காலத்தில் எல்லாவற்றையும் ரசனையோடு செய்தார்கள்... ரசித்தார்கள்... இன்று... ?<br /><br />இணைப்பில் பார்க்கிறேன்...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-19228022647436234762012-11-05T10:57:13.774+11:302012-11-05T10:57:13.774+11:30அடடா! அருமை, அருமை!! எனக்குத் தெரியாத எத்தனையோ விட...அடடா! அருமை, அருமை!! எனக்குத் தெரியாத எத்தனையோ விடயங்களை ஆர்வத்தோடு பகிர்ந்து கொண்டீர்கள் தோழி!! இதில் எவ்வளவு ஆசை இருந்திருந்தால் அதை தாய் வீட்டுச் சீதனமாய் கொண்டுவந்திருப்பீர்கள்!! மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நிலா!<br /><br />உண்மையில் இப்படியான கட்டுரை எழுத ஆரம்பித்தது தமிழ் விக்கிபீடியாவிற்காக! அவற்றில் மூழ்க மூழ்க எத்தனை எத்தனை பொக்கிஷங்கள் வெளியே வருகின்றன!<br /><br />தோழி, எனக்குத் தெரியாத எத்தனையோ விடயங்களைப் பட்டியல் இட்டிருக்கிறீர்கள். முடிந்தால் அவற்றை படத்தோடு பதிவு செய்யுங்களேன்! நாங்களும் கொஞ்சம் அறிந்து கொள்கிறோம்.<br /><br />அந்த அபூர்வ பொருட்கள் விற்கும் முகவரியில் சென்று பார்த்தீர்களா? நீங்கள் சொன்னது மாதிரி நம் நாட்டவர் பாவித்த சுன்னாம்பு டப்பா கூட காட்சிப் பொருளாய் விற்பனைக்கு இருக்கிறது.<br /><br />உங்களிடம் இருக்கும் இத்தகைய பாரம்பரியப் பொருட்களை எல்லாம் பார்க்க ஆவலாக இருக்கிறது நிலா. அவை காணாமல் போய் விடுவதற்கு முன்னால் பதிவு செய்து விடுங்கள் தோழி<br />யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-32818301454549350932012-11-05T04:26:24.922+11:302012-11-05T04:26:24.922+11:30ஹையா!! இதே போன்றதொரு தட்டம் என்னிடமுண்டு. திரு...ஹையா!! இதே போன்றதொரு தட்டம் என்னிடமுண்டு. திருமணத்துக்குப் பின் என் அம்மாவிடம் நானாக விரும்பிக்கேட்ட ஒன்றே ஒன்று இதுதான். நான் விபரம் தெரிந்து பார்த்துவந்த அது இன்றைக்கும் அது தொடர்பான சிறுபிராயத்து நினைவலைகளை தூண்டியபடி என்னுடன். வெற்றிலைக் காளாஞ்சி என்போம் அதை. நீங்க சொல்வது போல் உணவுக்குப் பின் வெற்றிலைக் காளாஞ்சியை விருந்தினர் முன் வைத்து உபசரிப்பது வழக்கம். வீட்டுக்கு ஒருவர் வெற்றிலை போடும் பழக்கத்திலிருந்தனர் அக்காலத்தில். வெற்றிலைகள், கொட்டைப் பாக்கு, நறுக்க பாக்குவெட்டி, சீவல், சுண்ணாம்பு டப்பா(சுண்ணாம்புக் கிளிஞ்சல்களை வாங்கிவந்து கொதிநீரில் போட்டு குழப்பி ஒரு சுண்ணாம்புக் கலயம் இருக்கும் எல்லோருடைய வீட்டிலும். காய்ந்து போகாமல் அவ்வப்போது சுடுநீர் ஊற்றி மூடியிருக்கும். காலப்போக்கில் வாச்னைபோட்டு நிறமூட்டி சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களில் வந்ததை வாங்கத் தொடங்கினர்) ஏலக்காய்கள், கிராம்பு சிறிதளவு எல்லாம் அதில் அலங்காரமாய் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும்.<br /><br />இப்படிப்பட்ட பொருட்கள் தேவையற்று வழக்கொழிந்து விட்டாலும், எஞ்சியிருப்பவை பொக்கிஷமாகி கடந்த காலத்தின் ஆவணமாய் நம்முடன். <br /><br />கொஞ்ச நாள் நீர் விட்டு பூக்கள் போட்டு அலங்கரித்து வாசல்புறத்தில் வைத்திருந்தேன். நீங்க சொன்னது போல் பராமரிப்பு சிக்கலில் மறுபடி பரண் ஏறிவிட்டது அது.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.com