tag:blogger.com,1999:blog-5970246057768347279.post5759995611735080158..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: பழந் தமிழ்யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-68837954157936764182011-03-06T19:48:33.875+11:302011-03-06T19:48:33.875+11:30ஆஹா!என் இனிய தோழியே!:)
இதோ இப்போதே உங்கள் பதிவு ப...ஆஹா!என் இனிய தோழியே!:)<br /><br />இதோ இப்போதே உங்கள் பதிவு பார்க்க வருகிறேன்.<br /><br />அன்பால் திக்கு முக்காட வைக்கிறீர்கள் என்னை!<br /><br />இவ்வாறு சுமார் 11,000 சொற்கள் இருக்கின்றன தாயே!சூடாமணி நிகண்டு என்றொரு அகராதியை நூலகம்.நெற்றில் பதிவிறக்கிக் கொள்ள முடிகிறது.அதில் அத்தனை சொற்களும் இருக்கின்றன.<br /><br />அதில் எனக்கு மிகவும் பிடித்த விடயம் என்னவென்றால் உதட்டில் கூட மேலுதடு, கீழ் உதடு, கூந்தலிலும் ஆண்மயிருக்கு ஒரு பெயர் பெண்மயிருக்கு ஒரு பெயர்,...இப்படி எவ்வளவு நுட்பமாக விடயங்களுக்குப் பொருள் கொண்டிருக்கிறார்கள் என்பது தான்.இப்படி நிறையச் சொற்கள்!!<br /><br />நாம் அவற்றை எல்லாம் பாவிக்காமல் வீணே விட்டு விட்டோம்.<br /><br />இந்த நுட்பம், ஆழம், அகலம் எல்லாம் தமிழின் அழகல்லவோ?.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-51464238597983141882011-03-05T18:46:41.211+11:302011-03-05T18:46:41.211+11:30அம்மம்மம்மம்மா.... குதூகலமான நன்றிகளைச் சமர்பிக்கி...அம்மம்மம்மம்மா.... குதூகலமான நன்றிகளைச் சமர்பிக்கிறேன் தோழி தங்களுக்கு...!! இவ்வளவு 'பழம்'தமிழ்ச் சொற்களை மீட்டெடுத்தமைக்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவற்றை வழக்கில் மறுபடியும் கொணர நம்மாலான முயற்சிகளைச் செய்யலாம். ஏற்கனவே, தங்கள் HUCKLEBERRY FRIEND ('இடருய்தி' )பற்றிய ஐயம் தெளிவிப்பால் அதை வைத்து ஒரு கவிதை எழுதி, இன்றைய பதிவாய் எனது வலைப்பூவில் ஏற்றியிருக்கிறேன் என்பதையும் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன் தங்களிடம்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-31340515804663180632011-03-04T00:02:23.788+11:302011-03-04T00:02:23.788+11:30அவந்திகை -கிளி
சூழி -உச்சி
மாலதி -மல்லிகை
மெளவல் ...அவந்திகை -கிளி<br />சூழி -உச்சி<br />மாலதி -மல்லிகை <br />மெளவல் -முல்லை<br />அங்குலி -விரல்<br />உகிர் -நகம்<br />கிலுத்தம் -மணிக்கட்டு<br />கூர்ப்பரம் -முழங்கை<br /><br />சியாமளம் -பச்சை<br />மஞ்சரி -பூங்கொத்து<br />ஞிமிலி -நாய்<br /><br />சாரங்கம் -சாதகப் பறவை<br />நேமி - சக்கரவாகப் பறவை<br />சிதகம் -தூக்கணாங்குருவி<br />கோமளம் - இளமை<br />பொற்பு - ஒப்பனை<br />போதம் - அறிவு<br />பிங்கலம் - பொன்<br />கன்னல் - கரும்பு<br /><br />துச்சில் - ஒதுக்கிடம்<br />ஓதம் - வெள்ளம்<br />பங்கம் - சேறு<br />தால வரிசை - பனைகளின் வரிசை. புற்பதி என்பதும் பனையையே குறிக்கும்.<br />மார்க்கம் -நெடுந்தெரு<br />விடங்கம் -வீதியை அலங்கரிக்கும் கொடி<br />மறுகு - குறுந்தெரு<br />பாக சாலை - மடப்பள்ளி<br /><br />குமுதம் - அடுப்பு<br />உலூகலம் - உரல்<br />வட்டிகை - கூடை<br />நவியம் - கோடாலி<br />முசலம் - உலக்கை<br />சூர்ப்பம் - சுளகு<br />தாம்பு - கயிறு<br />குழிசி - கிடாரம்<br /><br />சுவேதம் -வியர்வை<br />தவளம் -வெண்மை<br />பெளவம் -முத்து<br /><br />சீசகம் - மூங்கில்<br />நறுமருப்பு -இஞ்சி<br />உருளரிசி -மல்லி (பொருத்தப் பாட்டைப் பாருங்கள்!)<br />சசம் -முயல்<br /><br />மதுரம் -இனிமை<br />சசி - கற்பூரம்<br />நேமிநாதம் - தேர் உருளும் ஓசை<br />சயந்தனம் - தேர்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-82498415805862706872011-03-03T23:46:08.046+11:302011-03-03T23:46:08.046+11:30அன்பு நிலா,
முதலில் உங்கள் பொறுமைக்கும் முயற்சிக்க...அன்பு நிலா,<br />முதலில் உங்கள் பொறுமைக்கும் முயற்சிக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றியும்.<br /><br />இதோ உங்களுக்கான விடைகள்;<br /><br />அங்கிதம்- தழும்பு அல்லது மச்சம் (சரி)<br /><br />ஓட்டமும் அதரமும் -மோவாயும், உதடுகளும்; சரி எனவே கொள்ளலாம்.(குறிப்பாக மேலுதடும் கீழுதடும்)<br /><br />செவிப் பூ - தோடு (சரி) <br /><br />அங்கராகம் - முகப்பூச்சு (பவுடர்)<br /><br />படிமக்கலம் - முகம் பார்க்கும் கண்ணாடி (சரி)<br /><br />கங்கதம் - தலை வாரும் சீப்பு (சரி)<br /><br />குந்தளம் - தலை முடி(குறிப்பாகப் பெண்ணின் கூந்தலைக் குறிக்கிறது.சரி) <br /><br />நவநீத நிறம் - உண்மையில் பொருள் நீங்கள் சொன்னதற்கு எதிரானது. வெண்ணை வண்ணம். சீஸ் - பாற்கட்டி நிறம்) நவநீத கிருஷ்னன் என்பது வெண்ணையை வைத்திருக்கின்ற கண்ணனைக் குறிக்கும்.) <br /><br />உவளித்து - குளித்து (குறிப்பாகச் சுத்தப் படுத்தி என்று சொல்லலாம்) <br /><br />சுரும்பு, கேசவம் -வண்டு, தும்பி (சரி) <br /><br />கோகிலம் - குயில்(குயில்)<br /><br />கசனம்- கரிக்குருவி என்பது சரியான விடை.பூனையை வெருகல் என்பதுண்டு)<br /><br />உங்களுக்கு என் வாஞ்சை மிகு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நிலா.உங்களால் உயிர்த்தேன்.<br /><br />நீங்கள் கேட்ட மற்றைய சொற்களுக்கான விடைகள்;<br /><br />ஞாட்பு - போர்<br />துவர்க்காய் மரம் - பாக்குமரம்<br />கிஞ்சுகம் - முள்முருக்கு (யாழ்ப்பாணப் பகுதிகளில் வெற்றிலைக் கொடி இந்த மரத்தில் தான் படர்ந்திருக்கும்.முழுக்க முழுக்க முள் நிறைந்தது. இதன் இலைகள் கால்நடைகளுக்கு மிகப் பிடித்தமானது.திருமணங்களோடும் இம்மரத்துக்கு நிறைய சம்பந்தம் இருக்கிறது) <br />தாம்பூல வல்லி(வெற்றிலைக் கொடி?)நிச்சயமாக! காரவல்லி - பாவற்காய்<br />வத்சலை - தாய்ப்பசு (வத்சலா என்று பெண்களுக்குப் பெயர் வைப்பதுண்டல்லவா? - அர்த்தம் இது தான்.தாய்ப்பசுவின் தாய்மை பிரசித்தம்.கன்றினை வாஞ்சையோடு நக்கி நக்கி அது பாலூட்டும்).<br />வந்சம் -பசுக்கன்று<br />பகடு -ஆண் எருமை<br />மேதி -பெண் எருமை<br />குரச்சை -குதிரைகளின் குளம்பு <br />கபோதம் -புறா<br />கச்சோதம் -மின்மினி<br />பிபீலிகை - எறும்பு<br />நளிவிடம் -தேள்<br />நிலந்தி - நுளம்பு<br />துந்துளம் - பெருச்சாளி<br />வெருகல் -பூனை<br />எகினம் - அன்னம்<br />சசலம் -முள்ளம் பன்றியின் முள் (இதனால் குத்தி துவாரம் உண்டாக்கி பெண்கள் அதில் தையல் வேலைப்பாடுகள் செய்வார்கள்.நுட்பமானதும் அழகியதுமான வேலைப்பாடாக அது இருக்கும் -அக்கோபா வேலைப்பாட்டை ஒத்தது) <br />ஞெள்ளல் -மேன்மை<br />ஆசினி -ஈரற்பலாமரம்<br />கபித்தம் - விளாத்தி மரம்<br />சிந்தகம் - புளியமரம்யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-3748291341433431432011-03-03T12:52:17.937+11:302011-03-03T12:52:17.937+11:30:)
புன்னகைக்கு நல்வரவு.:)
ஒரு பொருள் தான் ஆனால்,ப...:)<br />புன்னகைக்கு நல்வரவு.:)<br /><br />ஒரு பொருள் தான் ஆனால்,பார்க்கின்ற பார்வைகள் எப்படி வேறு படுகிறது பாருங்கள்.<br /><br />எனக்கு இந்தப் படத்தைப் பார்த்ததும் இது புன்னகைக்கின்ற அழகிய பல்வரிசை இப்படி இருக்கும்;சொற்களும் ஒவ்வொரு முத்துக்களைப் போலவே என்றெல்லாம் எண்ணங்கள் ஓடின.<br /><br />நாங்கள் திகழுக்காகக் காத்திருக்கிறோம்.பாவம் நம்மோடு நிலாவும் காத்திருக்கிறார். அவர் வராத விடத்து நாளை இவற்றுக்கான பதில்களைத் தர எண்ணம்.<br /><br />புன்னகை கொஞ்சம் முயற்சிக்கலாமே!:)<br /><br />வரவுக்கு நன்றி புன்னகை. தொடர்ந்து வாருங்கள்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-57985199889223443782011-03-02T23:22:04.580+11:302011-03-02T23:22:04.580+11:30I love to have the fruit. It is so cuteI love to have the fruit. It is so cutePunnakaihttp://sowntharyinpunnakai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-11947767886839776722011-02-23T11:32:52.025+11:302011-02-23T11:32:52.025+11:30கோகிலா,அவந்திக்கா,மாலதி,சியாமளா,மஞ்சரி,
கோமளா,குமு...கோகிலா,அவந்திக்கா,மாலதி,சியாமளா,மஞ்சரி,<br />கோமளா,குமுதா,மதுரா,சசி எனப் பெண்களுக்கும்;சாரங்கன்,சயந்தன்,நவநீதன் என ஆண்களுக்கும் பெயர் வைப்பதுண்டே!அப்படி நினைத்துப் பார்த்தாலும் சில சிலவற்றுக்குப் பொருள் கிட்டலாம்.<br /><br />நானும் அண்மைக்காலமாகத்தான் இச்சொற்களையும் அவற்றின் பொருளையும் கண்டெடுத்தேன்.:)யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-2087726663332985142011-02-23T11:15:10.528+11:302011-02-23T11:15:10.528+11:30நிலா,திகழ் வரும் வரைச் சற்றே காத்திருப்போமா?
உங்...நிலா,திகழ் வரும் வரைச் சற்றே காத்திருப்போமா?<br /><br /> உங்கள் ஆர்வத்துக்கும் பகிர்வுக்கும் மிக நன்றி தோழி.பெரும்பாலானவை மிகச் சரி என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறேன்.<br /><br />சரியான விடையை முதலில் சொல்லியவர்களின் பெயரோடு பொருளையும் அல்லது பொருளோடு பெயரையும் இறுதியாகப் பதிவில் பதிவேற்றி விடுகிறேன்.<br /><br />மிக்க மகிழ்ச்சி நிலா. <br /><br />உங்கள் ஆர்வமிக்க முயற்சிக்கும் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-13064356284942757632011-02-23T11:09:46.478+11:302011-02-23T11:09:46.478+11:30வருடக்கணக்காகிறது திகழ் உங்களைக் கண்டு. நலமா?
வார...வருடக்கணக்காகிறது திகழ் உங்களைக் கண்டு. நலமா?<br /><br />வாருங்கள் பொருளோடு.நானும் நிலாவும் காத்திருக்கிறோம்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-7385710423281816412011-02-23T04:38:16.398+11:302011-02-23T04:38:16.398+11:30ஞாட்பு, துவர்க்காய் மரம், கிஞ்சுகம், தாம்பூல வல்லி...ஞாட்பு, துவர்க்காய் மரம், கிஞ்சுகம், தாம்பூல வல்லி(வெற்றிலைக் கொடி?), காரவல்லி(கற்பூர வல்லி?), வத்சலை, வந்சம், பகடு, மேதி, குரச்சை, கபோதம், கச்சோதம், பிபீளிகை, நளிவிடம், நிலந்தி, துந்துளம், வெருகல், எகினம், சசலம், ஞெள்ளல், ஆசினி, கபித்தம், சிந்தகம்... <br /><br />இவற்றுக்கும் விளக்கம் தந்தால் நலம்.<br /><br /><br />அங்கிதம்- தழும்பு அல்லது மச்சம்<br /><br />ஓட்டமும் அதரமும் -மோவாயும், உதடுகளும்<br /><br />செவிப் பூ - தோடு அல்லது காதுமடல் <br /><br />அங்கராகம் - நெற்றிப் பொட்டு<br /><br />படிமக்கலம் - முகம் பார்க்கும் கண்ணாடி <br /><br />கங்கதம் - தலை வாரும் சீப்பு <br /><br />குந்தளம் - தலை முடி <br /><br />நவநீத நிறம் - கருமை <br /><br />உவளித்து - குளித்து <br /><br />சுரும்பு, கேசவம் -வண்டு, தும்பி <br /><br />கோகிலம் - குயில் <br /><br />கசனம்- பூனை <br /><br />ஒரு அனுமானத்தில் பெரும்பாலும் இவை சொல்லப் பட்டிருக்கின்றன. எத்தனை மதிப்பெண் நான் பெறுவேன்?!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-66389635811906984972011-02-23T04:24:59.910+11:302011-02-23T04:24:59.910+11:30ஒருவாறாக கதையாய் படிக்கும் போது விளங்கியது போலிருந...ஒருவாறாக கதையாய் படிக்கும் போது விளங்கியது போலிருந்த அர்த்தங்கள், எடுத்தெழுதி சவாலாய் தாங்கள் கேட்கையில்... மிரட்டுகிறது தோழி. எப்படியோ உங்க புண்ணியத்தால் வழக்கொழிந்த அழகு தமிழ்ச் சொற்கள் அறியக் கிடக்கின்றன. பழைமை பேசி ஐயா, பா.ரா. அண்ணா என யாராவது வந்து தெளிவித்த பின் மறுபடி வந்து கண்டுகொண்டால் போகிறது. என் சிற்றறிவிற்கு ஏதும் எட்டவில்லை தாயே...!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-78396000186737739102011-02-21T23:57:16.745+11:302011-02-21T23:57:16.745+11:30உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்
வருகிறேன் பொருளு...உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்<br /><br />வருகிறேன் பொருளுடன்<br /><br />கண்டிப்பாகதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com