Wednesday, December 21, 2016

’உயர்திணை’ அமைப்பினரின் புத்தக வெளியீடு - 1 -


இனிய தமிழ் இலக்கிய உள்ளங்களே!

வருகிற புது வருடம் உங்கள் எல்லோருக்கும் சுகத்தையும் சுபீட்சத்தையும் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் எடுத்து வருவதாக!

இந்த சந்தர்ப்பத்தில் என்னோடும் என் தமிழோடும் பயணித்த உங்கள் எல்லோருக்கும் என் அன்பினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்வதிலும் பெரு மகிழ்வெய்துகிறேன்.

புது வருடம் என்னவெல்லாவற்றையும் எடுத்து வரும் என்பது நத்தார் பாப்பா கொண்டு வரும் பரிசுப் பொருள் போல புதினமானது.

இருந்த போதும், ’முயற்சி தன் மெய் வருத்த கூலி தருமெல்லோ’? என் அன்புத் தோழி கீதாவின் / கீதா.மதிவாணனின் முதலாவது புத்தக வெளியீடு நம் அமைப்பான உயர்திணை ஊடாக முதலாவது புத்தக வெளியீடாக எதிர் வரும் தைத் திங்கள் 26ம் திகதி அவுஸ்திரேலிய தினமான விடுமுறைநாளாக இருக்கும் வியாழன்று வெளியிட இறையருள் கூடி இருக்கிறது.

கீதாவின் புத்தகம் ஒரு மொழிபெயர்ப்பிலக்கிய வகை சார்ந்தது. அவுஸ்திரேலியாவின் செவ்வியல் எழுத்தாளரான ஷென்றி லோஷனின் அவுஸ்திரேலியாவுக்கு ஆங்கிலேயர்கள் புலம்பெயர்ந்து வந்த போது அவர்கள் எதிர் கொண்ட சவால்கள்/ வாழ்வியல்கள்/ பாடுகள் / பண்பாடுகளைப் பேசுகிறது. 

தமிழ் இலக்கியத்துக்கு இது வரை வெளிவந்திராத புதுவகை வாழ்வியல் அறிமுகம் இது. எளிய தமிழில் ஒரு பண்பாட்டையே தமிழுக்குக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தி இருக்கும் தமிழின் ஆழுமை கதைகள் எங்கும் வியாபித்திருக்கிறது.

தமிழர்கள் புலம் பெயர்ந்ததால் தமிழுக்கு சாத்தியமாகி வரும் இத்தகைய புதிய இலக்கிய முயற்சிகளுக்கு நீங்கள் எல்லோரும் ஆதரவு தர வேண்டும் என்று அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

அன்றய தினம் அவுஸ்திரேலியா என்ற தேசம் உருவாகிய காலத்து வாழ்வியலைச் சித்தரிக்கும் குறும் படம் ஒன்றும் காட்டப்பட இருக்கிறது. இவை அக்கால வாழ்வியலை விளங்கிக் கொள்ள மேலும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பது நம் நம்பிக்கை.

நிகழ்ச்சி நிரல் விரைவில் உங்களுக்குத் தெரியப்படுத்தப் படும்.

வர முடிந்தவர்கள் வாருங்கள்....
         வர வேண்டும்.....