கடந்த 15.07.2026 அன்று அதிகாலை எங்களுக்கு ஒரு பேத்தி பிறந்திருக்கிறாள்.
முதன் முதலில் கிடைத்த மூத்த பேத்தி அவள்
பெயர் இனியா!
இன்று அவள் தன் தாய் தந்தையரோடு மூன்றுவாரக் குழந்தையாக என் வீட்டுக்கு வந்திருந்தாள். அவளுக்காக நான் எழுதிய கவிதை ஒன்றை ஒரு ஞாபகார்த்தம் கருதி இங்கு பதிவேற்றி வைக்கலாம் என்று நம்புகிறேன்.
Welcome Home Iniya
நல் வரவு இனியா
முகம் மலர்ந்த முத்தமிழே
முன் உதித்த ரத்தினமே
தங்கத் தமிழ் மகளே
இனிய மகளே இனியா
கண் மலர்ந்து பாரம்மா
வந்து மடி சேரம்மா
கட்டிக் கனியமுதே
பேத்தியாக்கிய பொற்கிளியே
பாக்கியமே பார்புகழ
வந்துதித்த பாற்குடமே
கண்மலர்ந்து பாரம்மா
வந்து மடி சேரம்மா
திவ்யா தந்த திவ்யமே
நாரா தந்த நற்கனியே
நாளும் உனை வாழ்த்துகிறேன்
நற்தமிழே வாழ்கவம்மா
மூத்த பேத்தி ஆனவளே
எங்கள் வீட்டு ஒளிவிளக்கே
புன்னகையே முழு நிலவே
பார்புகழ வாழ்கவம்மா
குடும்பத்தை உருவாக்க
குதூகலத்தைக் கொண்டாட
கூடி நாங்கள் களித்திருக்க
வந்தவளே வாழ்கவம்மா
நாங்கள் பெற்ற பெரும் பேறே
குணவதியாய் வாழுமம்மா
தமிழ் கொண்டு மொழிபேசி
பார் புகழ வாழுமம்மா
தமிழ் நெறிப் பாதையிலே
நல்ல நடை போடுமம்மா
நல்லவழி விளங்கி விட
ஆனைமுகன் காத்திருப்பான்
என்றும் அவன் பாதம் பற்றி
பாதையினை வகுத்திடம்மா
வருத்தம் வரும் வாழ்க்கையிலே
எதிர்பாரா இடரும் வரும்
'இதுவும் கடந்து போகும்'
என்றிருந்தால்
'எல்லாம் நன்மைக்கே'
என்றொரு திடம் இருந்தால்
வாழ்க்கையை வென்றிடலாம்
நல்லபடி வாழ்ந்திடலாம்
ஆத்தாப்பாட்டி சொன்னதனால்
ஏற்கவேண்டும் என்றில்லை
உள்ளத்தில் அறத்தை நீ
தெம்போடு சுமந்து நின்றால்
எல்லாமே சுகமாகும்
பிரபஞ்சம் காத்து நிற்க
சுபீட்சமாய் வாழ்ந்திடம்மா
எண்ணத்தால் உயர்ந்து நில்
அறத்தை நீ சுமந்து செல்
மிச்சமெல்லாம் இறைவன் செயல்
என்றேயிரு போதுமது!
காத்துநிற்பான் ஆனைமுகன்
ஆணை இது நம்புமம்மா
இனியவளே இனியா
இன்பமாக வாழ்ந்திடம்மா
வாழ்த்துகிறேன் வாழ்கவென்று
மகிழ்வாக வாழுமம்மா
ஆத்தாப்பாட்டி வாழ்த்துகிறேன்
ஆரோக்கியமாய் வாழுமம்மா
மாங்கனியே முத்தமிழே
மாண்புற நீர் வாழுமம்மா
எல்லா நலமும் பெற்று
எழிலே நீர் வாழுமம்மா
காலம் தந்த கண்மணியே
கமலமென மலர்ந்தவளே
களிப்போடு வாழுமம்மா
முடிக்கத்தான் பார்க்கின்றேன்
முடியவில்லை
சுருக்கத்தான் நினைக்கின்றேன்
இயலவில்லை
முனைகின்றேன் முனைகின்றேன்
முயற்சியோ முடியவில்லை
என்றாலும் என்கிளியே
என்வாழ்த்தும் அப்படித்தான்
முடியாமல் நீண்டு போகும்
முல்லைமலரே வாழுமம்மா
முதன் முதலாய் காண்கின்றேன்
என் உவகை என்ன சொல்வேன்!
அன்னையோடு வந்தாய் தாயே
பார்புகழ வாழ்க நீயே
தந்தையோடும் வந்தாய் தாயே
தரணியில் நீ தழைப்பாய் நீயே
தளிரே தங்கத்தில் வார்த்த வடிவழகே
காலமெல்லாம் நீ களிப்போடும்
நிறைவான சிரிப்போடும்
நின்மதியாய் வாழுமம்மா
அம்மா போல் அப்பா போல்
பாட்டி தாத்தா சுற்றத்தோடு
குணத்தில் வார்த்த குலக் கொழுந்தே
மகிழ்ந்து நீ வாழ்ந்திடம்மா
குமிழ் சிரிப்பே எம் குலக் கொழுந்தே
குலநிதியே களங்கமில்லா பொற்கிளியே
பொலிவோடு நீ விளங்கிடம்மா
ஆண்டவன் காத்து நிற்க
அருளோடு வாழ்ந்திடம்மா!
- யசோதா.பத்மநாதன்
07.08.2026
Welcome to the world Iniya
Sweet Iniya, born to shine
Little star and joy of mine
Softest cheeks and brightest smile
Stay with paatti for a while
Hold my hand and feel my love
You are a blessed gift from above
Grow up strong and dream so high
Touch the star up in the sky
Aaatha paatti's heart
Beats just for you!
7.8.2026


















































