Tuesday, September 8, 2009

வென்ற்வேத்வில் தமிழ் கல்வி நிலையக் கலைவிழா

சென்ற சனிக்கிழமை 06.09.09 அன்று வென்ற்வேத்வில் தமிழ் பாடசாலை மாணவர்களின் கலைவிழா மாலை 2 மணியளவில் மிகக் கோலாகலமாகவும் சிறப்பாகவும் நடந்தது.சுமார் 500மாணவர்களையும் சுமார் 40 ஆசிரியர்களையும் கொண்டியங்கும் இக் கல்வி நிலையம் இரண்டு வளாகங்களில் நடைபெறுகிறது.நடப்புக் கல்வியாண்டின் அதிபராக திரு. நாகேஸ்வரன் அவர்கள் விளங்குகிறார்.

1988ம் ஆண்டு 30 மாணவர்களுடனும் 4 ஆசிரியர்களுடனும் ஆரம்பித்த இக்கல்வி நிலையம் இன்று இரண்டு வளாகங்களில் சனிக்கிழமை தோறும் மாலை 2.00 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை தமிழை அடுத்த சந்ததிக்கு வழங்கும் பணியில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறது.

அங்கு கல்வி கற்கும் சில பெரிய வகுப்புச் சிறார்களின் படங்கள்(ஆசிரியர்களுடன்) சிலவற்றை உங்கள் பார்வைக்காக இங்கு தந்துள்ளேன்.






இன்றய வருடம் " ஒற்றுமையே பலம்" என்ற தலைப்பை முன் வைத்து இடம் பெற்ற கலைவிழாவின் அடி நாதத்தை விழாவில் இடம் பெற்ற நிகழ்ச்சிகள் மெருகேற்றி அரங்கேற்றின.ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒன்றை ஒன்று மிஞ்சும் விதமாக அமைந்திருந்தன.

வருடந்தோறும் இடம் பெறும் இம்மாதிரியான கலைவிழாக்கள் வருங்காலத்தில் தமிழ் வாழும் என்பதற்குக் கட்டியம் கூறி நிற்கிறது.

கீழே உள்ள படங்கள்இரண்டும் இரண்டு வளாகங்களிலும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களைக் கொண்டிருக்கிறது.இவை கலைவிழா ஆண்டுமலரில் இருந்து பெறப்பட்டன.


3 comments:

  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    http://www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

    இவண்
    உலவு.காம்

    ReplyDelete
  2. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    http://www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

    இவண்
    உலவு.காம்

    ReplyDelete
  3. பதிவுலக நன்பர்களே – இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் – 3

    01. கல்வியின் இன்றையநிலை?
    02. சமசீர் கல்வியின் தேவை?
    03. தாய் மொழிகல்வியின் தேவை?

    நன்றி

    http://oviya-thamarai.blogspot.com/2009/10/3_11.html

    ReplyDelete