Wednesday, September 15, 2010

படித்ததில் பிடித்தது

நேரத்தைப் பிடிக்க ஓடிக்கொண்டிருப்பதால் முன்னரைப் போல் இங்கு அதிக நேரம் மினைக்கிட முடியவில்லை.என்றாலும் இந்த வலைப் பூவைப் பார்க்க வரும் என் நிரந்தர நண்பர்களுக்காக முன்னர் நான் சேகரித்து வைத்த பத்திரிகைத் துண்டொன்றில் இருந்து ஒரு விடயத்தை இன்று பதிவேற்றுகின்றேன்.

இது 2001ம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் இருந்து வெளியாகி வாரம் 3 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகிக் கொண்டிருந்த தினக்குரல் பத்திரிகையில் இது வெளிவந்திருந்தது.

படித்ததில் பிடித்தது:-

*அன்பும் கருணையும் உடையவராய் இருங்கள்.அது உங்களது முகத்துக்குப் பொலிவைத் தருவதுடன், மற்றவர்களை உங்களிடத்தில் ஈர்க்கும் விசையாகவும் செயற்படும்.

*மற்றவர்களுடன் பேசும் போது உரத்த குரலில் பேசாதீர்கள்.முக்கியமாகத் தொலைபேசியில் பேசும் போது.

*புதிய நண்பர்கள் அறிமுகம் ஏற்படும் போது விவாதங்களை முற்றிலுமாகத் தவிருங்கள்.

*உங்கள் தோற்றம் மற்றும் உடைகளை விடவும் உங்கள் வார்த்தைகள் தான் உங்களின் மதிப்பை உயர்த்தும் உண்மையான சாதனம் என்பதை அறியுங்கள்.

*மற்ரவர்களை உளப்பூர்வமாக மரியாதை செய்யுங்கள்.போலியான உபசரணைகளை முற்றிலுமாகத் தவிருங்கள்.

*இலக்குகளை நோக்கிய பயணங்களின் போது வரும் இடையூறுகளைப் பொருட்படுத்தாதீர்கள்.

*நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்வதையே நீங்களும் நடைமுறையில் கடைப்பிடியுங்கள்.உங்கள் பேச்சுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லாதவாறு நடந்து கொள்ளுங்கள்.

* உங்கள் நலனை முன்னிட்டு மற்றவர்களுக்கு இடையூறு செய்யாதீர்கள்.

*யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் மேலோட்டமாக விமர்சனம் செய்யாதீர்கள்.

* எந்த மோசமான நிகழ்ச்சியிலும் எத்துணை மோசமான நபரிடத்திலும் உங்களுக்கு ஒரு செய்தி அல்லது படிப்பினை இருக்கும் என்பதில் முனைப்போடு இருங்கள்.

*சுய முயற்சி இல்லாத வெற்றியும் தகுதியில்லாத புகழும் நெடு நாள் நீடிக்காது என்பதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment