Sunday, December 6, 2020

ஆறு....

 அகம் நகுதல் - உள்ளம் உவகை கொள்ளுதல் - உள்ளம் புன்னகைத்தல் - இப்படி ஒரு சம்பவத்தை ஏதேனும் ஒரு முறையேனும் நிச்சயம் நாம் அனுபவம் செய்திருப்போம்.

உவகை கொண்ட தருணங்கள், அகம் நகை செய்த தருணங்கள் பல இன்றைக்கும் எனக்கு ஞாபகத்தில் உள்ளன. கடந்த வெள்ளிக் கிழமை நடந்த அகம் உவகை கொண்டு ஆறாக பெருகி ஓடிய தருணம் ஒன்று இது.



                      ஆறு

சில நாட்கள் உன் வகுப்புக்கு நான் வரவில்லை.

அடுத்த வகுப்புக்குள் நுழைந்த தருணம் ஒன்றில்

நீ ஓடி வந்து வழி மறித்தாய்.

விழியெல்லாம் ஆர்வத்தைக் கோலி

பதினெட்டுப் பற்களிலும் புன்னகை தேக்கி

'ஒன்றைத் தொடு' என்றாய்.

நீலம் என்றேன்.

மேலுமொன்றைத் தொடு என்றாய்

பூ ஒன்றைத் தொட்டேன்.

மேலும் ஒன்றைத் தொடப் பணித்தாய்.

இரண்டைத் தொட்டேன்.

ஆறைத் தொடு; ஆறைத் தொடு என்று துள்ளினாய்.

ஆறைத் தொட்டேன்.

அதை விரித்து,’யூ ஆர் த குயின்’

என்றதைச் சொல்லி விட்டு

பரட்டை மயிர் துள்ளித் துள்ளி விழ

குதித்தோடிச் சென்றாய்.


உன்பின்னால் பெருகி ஓடியது

ஆறு....

No comments:

Post a Comment