Friday, July 30, 2021

மூலையில் ஒரு நாற்காலி

குளிர்காலத்தின் நடுவில் உட்காந்திருக்கிறோம்.

நாளுக்கு நாள் கொரோனாவின் பெருக்கம் அதிகரித்தபடி இருக்கிறது. நேற்றயதினம் கட்டுப்பாடுகள் இன்னும் இறுகி 5 கி.மீ. ற்குள் மாத்திரம் தான் - அதிலும் அத்தியாவசியம் என்றால் மாத்திரம் தான் வீட்டினை விட்டு வெளியே வரலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

அந்த அத்தியாவசியங்களும் கூட என்ன என்னத்திற்காக என்று பட்டியல் தரப்பட்டிருக்கிறது. மீறுபவர்களுக்கு அபராதங்களும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. நகர்புறங்களில்; நாட்டுப் புறங்களில் இந்தக் கட்டுப்பாட்டை மீறுபவர்களைக் கண்காணிப்பதற்காக பொலிசாரோடு சேர்ந்து இராணுவமும் வரவழைக்கப்பட்டிருக்கிறது.

நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்தே வருகிறது.

என் வீட்டுக்கு மிக அருகாமையில் இருக்கிற பிரதேசங்கள் எல்லாம் கொரோனா தொற்றுகளும் பாதிப்புகளும் மிக அதிகரித்துப் போயிருப்பது இதுதான் முதல் தடவை.

சரி, மூலையில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கக் காலம் எம்மைப் பணித்திருக்கிறது. அதைமீறி செய்ய என்ன இருக்கிறது? 

எதுவுமில்லை.

என் பள்ளிக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஏதேனும் புதிதாக இருக்கிறதா என்ற என் இணையத்தேடலில் டொக்டர் ஜேன் என்று ஒருவரைக் கண்டு கொண்டு அவரிடம் இருந்து கொஞ்சம் படித்துக் கொண்டேன். அதன் மூலையில் ஒரு சிறு குறிப்பு ஒன்று புத்தக வாசிப்பு குறித்து இருந்தது. 

அது இவ்வாறு சொல்கிறது.

இந்தப் புத்தகம் என் வீடு.
கதவு திறந்திருந்திருக்க
நான் உள்நுழைவேன்..
இங்கு நான் மகிழ்ந்திருக்க
சாளரங்கள் பல உண்டு.
என்னை விரும்பும் நண்பர்கள் 
ஆண்களும் பெண்களுமாய்
இங்கிருக்க, 
என் சிரிப்பை, அன்பை, காதலை,
அழகை, மகிழ்ச்சியைக் 
இங்கு நானும் கண்டெடுப்பேன்.

No comments:

Post a Comment