Wednesday, January 13, 2010

தைத்திருநாள் வாழ்த்துக்கள்; 14.01.10



இயற்கை தான் மனிதனின் ஆசான்.தன் இருப்பு, அசைவு இரண்டிலும் அறிவு போதிக்கிறது அது.வானமும் பூமியும் வகுப்பறைகளாய் யுகம் தோறும் யுகம் தோறும் அது பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறது.புத்தி உள்ளவன் புரிந்து கொள்கிறான்.வலி உள்ளவன் அறிந்து கொள்கிறான்.

மனிதனின் படைப்பென்று பூமியில் ஏதுமில்லை.மனிதன் வெறும் கண்டு பிடிப்பாளனே தவிர படைப்பாளனல்லன்.அப்படிப் பார்த்தால் மொழி ஒன்று தான் மனிதனின் படைப்பு.மொழி கூட ஒலியின் வரி வடிவம் தான்.ஒலி மனிதனின் படைப்பல்ல;கண்டு பிடிப்புத் தான்.

- வைரமுத்து. கள்ளிக் காட்டு இதிகாசம்.-

புதிய நூற்றாண்டின் தொழில் நுட்ப யுகத்தில் வாழ்வதாகப் பெருமை கொள்ளும் மானிட சமூகம் இன்று இடம் பெறும் புயல், பூகம்பம், வெள்ளப் பெருக்கு, கடும் வெப்பம், கடும் குளிர்,சுனாமி,காட்டுத் தீ போனற இவற்றைக் கட்டுப்படுத்த என்ன செய்ய முடிந்தது?வரு முன் அறிந்து கொண்டதே தவிர குறைந்த பட்சம் மழை எங்கு பொழிய வேண்டும் என்பதையாவது தீர்மானிக்க முடிந்ததா?மேற்கூறிய இயற்கை அனர்த்தங்களை இல்லாது செய்ய முடிந்ததா?

அதனாலேயே இயற்கையை வழி பட்டது நம் இனம்.இயற்கையே இறைவனானது இந்திய இந்துத் தமிழ் பண்பாட்டில் தான். இந்து மத வேதங்களும் உபநிடதங்களும் அதனை தெய்வீகத்தோடு போற்றுகிறது.
இயற்கையோடும்
நன்றி உணர்வோடும் ஒப்புரவோடும் வாழ்ந்த பண்பாடு சூரியனைக் கொண்டாடியது.

அது தான் தைத் திருநாள்.

தைத்திருநாள் வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment