Tuesday, December 7, 2010

ஒளிரும் ஓவியம்

வருட இறுதி!

விடுமுறை ஆரம்பம்!!

புது வருடத்தில் மீண்டும் உங்கள் எல்லோரையும் சந்திக்கிறேன்.

எல்லோருக்கும் என் சுபீட்சமான நத்தார், புது வருட வாழ்த்துக்கள்!

வருகின்ற புது வருடம் எல்லோருக்கும் அன்பையும் மகிழ்ச்சியையும் உண்மையையும் நேர்மையையும் அதனால் விளைகின்ற நின்மதியையும் எடுத்து வரட்டும்!

அது வரை இந்த அழகிய எண்ணை வர்ண ஓவியம் இப்பக்கத்தை அலங்கரிகிறது.

இதனை ஓவியக் கலைஞர் இளைய ராஜா என்பவர் தை மாதம் ஒன்பதாம் திகதி 2010 ல் தீட்டியிருக்கிறார்!

எத்தனை அழகு! எத்தனை அழகு!!

பெண்ணின் அழகு,வெளிச்சம் படும் அழகு,பாவாடைக் கரை,வலையல்கள்,உட்கார்ந்திருக்கும் லாவகம், தூரிகைக்குள்ளால் கொண்டு வந்திருக்கும் பெண்ணின் வயது, அமானுஷமாக ஆச்சர்யமாக தூரிகை துலங்குகிறது! ஓவியமாய் மிளிர்கிறது! ஆஹா! என்ன அருமை!!

இது ரவி வர்மன் எழுதாத கலையோ?

“ஒளிரும் ஓவியம்”


3 comments:

  1. அட... துரிகையின் துலக்கம் அபாரம்!! துல்லியமான ஒளி- நிழல் பிரபாவங்கள்! இளைய ராஜாவுக்கும் தங்களுக்கும் வணக்கமும் வாழ்த்தும். மறு பதிவு வரை சளைக்காமல் வந்து வந்து பருகத்தந்த அழகோவியம்!!

    ReplyDelete
  2. உங்களுக்கும் இனிய புது வருட நத்தார் வாழ்த்துக்கள் தோழி....வரும் ஆண்டு சுபீட்சம் தரும் ஆண்டாக அமையட்டும்.

    ReplyDelete
  3. தோழிகளுக்கு என் அன்பும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

    ReplyDelete