![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIiS2I1jontM5h_3DQvxKfKum1CTI7gN613wpzjDaanEXkEyaAe742zMKFfsm-8H-VMfLD99FgtXHEgVN5t5J9XcCmtgbOTh15HCBhu96fS4hkM1eKd3i3h3wEs9u-voCNMqtdKBP8CvQ/s400/police_attack_colombo_sivakumar_2_267739382.jpg)
அடித்துக் கொலை செய்யப்பட்ட கொழும்பு பம்பலப்பிட்டியைச் சேர்ந்த மன நிலை பாதிக்கப்பட்ட சிவகுமார் என்ற இஞைஞனின் இப்புகைப்படம் சிங்கள இனத்தவரின் கொலை வெறியை மீண்டும் ஒருமுறை உலகுக்கு எடுத்துக் காட்டியது.அவன் செய்த ஒரே ஒரு தவறு ரயிலுக்குக் கல்லெறிந்ததே!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin1_d4P71lZAtz2S3zui7ZRYRckU22y2NidtXTldnsS9z7NH2CzDzs2EQNtm921Kauff5oyTIxeIvUq0M3w8fsXAm46ABYbvkPZSglAFRobLEl5SE8aU3PZoknzNveQHQyXJPVnYmEV7M/s400/imagesCAEHN754.jpg)
உலகுக்கு அமெரிக்காவின் முகத்திரையைத் தோலுரித்துக் காட்டியது இப்புகைப்படம்.சிறைப் பிடிக்கப்பட்ட ஈராக்கிய இளைஞர்கள் சிறைச்சாலைகளில் நடத்தப்படும் விதம் குறித்த இதனோடு சார்ந்த புகைப்படங்களும் வீடியோக் காட்சிகளும் உலகுக்கு அமெரிக்காவின் மனிதாபிமானத்தை அம்பலப் படுத்தியது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirC7OmnJElRKIK0lLF2qPBFQ4NyDwmNpUyeJHhC5T7ErlmG7070Ls69ZI9jb89qdXrzeYMbMH6bOvY4wL54tIFbWu2vos0NkMeMsf7W0FfOW3HisybjaRPkVqtiPJLy5uhi6CNXERU9Yg/s400/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.jpg)
நிக் உட் என்பவர் எடுத்த இப் புகைப்படம் அமெரிக்க போர் வெறியை நிறுத்திய வலிமை வாய்ந்தது.போரின் போது சாலையில் நிர்வானமாக ஓடி வரும் வியற்னாமியச் சிறுமியின் பெயர் கிம் புக்.
இதற்கே திரண்டு நின்றிருந்தது அன்று அமெரிக்கா.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEib_Qgy2RwSCR5SZQinGedv_z-kzv7HJJxARIAKZ5KCPJ-wPH4jTMJ6sGcjCF81lA49YShKLcDBQNqWURX4wZFwEXno-CeIJtr_3ErSKv4pB7JIOZ36zZzzvcThPuVDLxkJoItVXWiOt_Q/s400/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88.jpg)
மைக் என்பவரால் உகண்டாவின் வறுமையைப் பதிவு செய்த புகைப்படம் இது.1980ம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் புகைப்பட விருதினை அதற்கு விண்ணப்பித்திருக்காத போதும் விருதினைப் பெற்றுக் கொண்ட புகைப்படம் இது.ஆனால் பசியினால் இறந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தையும் வெள்ளை விரல்களின் செழுமையையும் புகைப்படம் எடுத்தது விருது பெறுவதற்கல்ல என்று விருதினை நிராகரித்தார் மைக்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3dcUkRGEKkaWiqp2sbXYJ_6Qn9LngKnNiosGGIZLVIvtLXvdeOxFfEe1HgDBHNB-a08wKlwwVdfzMuxFwZ5cWjlBjOtDDvUVuWS_Os-u3sa6RF7vEgcF2EwsPsTy3ryC6bw1Jzm-QWY0/s400/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF.jpg)
பச்சைக் கண்களைக் கொண்ட இப்பெண்ணின் புகைப்படம் முதன் முதல் நஷனல் ஜியோகிரபி என்ற சஞ்சிகையில் புகைப்படமாக வந்தது.அசாத்திய உணர்வுகளைக் கொண்டிருக்கும் இப் பெண்ணின் கண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்குரியது.இப்படம் எடுக்கப் பட்ட போது அவளுக்கு வயது 12.பொதுவாக ஆப்கானிஸ்தான் பெண்கள் எப்போதும் பர்தா அணிந்து காணப்படுவார்கள்.அதனால் அவர்களது முகங்கள் எப்போதும் மூடப்பட்டே காணப்படும்.இந்தப் பெண் பர்த்தாவை விலக்கிய ஒரு கணத்தில் எடுக்கப்பட்டது இப்புகைப்படம்.இப்பெண்ணின் பெயர் ஷர்பத் குலா.1992ல் இப்பெண் அகதி முகாமில் படித்துக் கொண்டிருந்த போது இப்படம் எடுக்கப் பட்டது.
இப்போது அவள் மூன்று குழந்தைகளின் தாய்.கண்களில் தொனிக்கும் ஏதோ ஒரு வீரியத்துக்காக இப்புகைப்படம் பிரபலமனது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWb9XvSYcv3Gy2bme7HLjET1yt_qyaRifT0OCoMIsD7vYpAbxC2VKcnQde_7OVhYAWHdOGsr-R9klQLv7J5H5ByC-CXO5zXtISCBaMf9bptk92xbuC4qv4ulxrhWkFSG1dwpLQwXedbNw/s400/%E0%AE%87%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88+1.jpg)
இது அமெரிக்க தங்குமிடமொன்றில் அமைக்கப் பட்டிருந்த குடி நீர் வசதி.வெள்ளையர்கள் குடிக்கவென்று தனியான இடமும் கறுப்பர்கள் குடிக்கவென தனியான இடமும் அமைக்கப் பட்டிருப்பது மாத்திரமல்ல வெள்ளையர்கள் குடிக்கப் பயன் படுத்திய பின் கழிந்தோடும் தண்ணீர் குளாய் வழியாக வந்து கறுப்பினத்தவர்களுக்குச் செல்கிறது.
இந்தப் புகைப்படமும் பல உண்மைகளை வெளியுலகுக்கு அம்பலப் படுத்தியது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgL0seJL0S5ikJ9qJD3iuMppRS3ckoKCBixW-CGScVESXFhFkCqy_JlhLBQF3CkwN5Jm9TV1tSfIw8WTN8ObZLo6fpVzjRJbzVM60APeiwFc4kd5sAZG0TVlv3PcLcKbolZR_ijq5dAf-Q/s400/images.jpg)
இப் புகைப்படம் ஆபிரிக்கக்கண்டத்தின் வறுமையை உலகுக்குப் படம் பிடித்துக் காட்டியது.எழுந்து நிற்க வலுவின்றி ஈரமெல்லாம் வற்றி மயங்கிய நிலையில் இருந்து இறக்கும் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கும் சூடான் நாட்டுக் குழந்தை ஒன்றை தின்பதற்குக் காத்திருக்கிறது பருந்து ஒன்று.
இதனைப் படம் பிடித்தவர் கெவின் காட்டர் என்பவர்.இந்தப் புகைப்படத்துக்கு புலிட்சர் விருது கிடைத்தது.ஆனாலும்,இன்னொரு பருந்தினைப்போல் காத்திருந்து படம் எடுத்தார் என்ற விமர்சனம் அவர் மீது பலத்த எதிர்ப்புணர்வோடு வைக்கப் பட்டதால் இளகிய மனம் கொண்ட கெவின் காட்டர் அதன் பின் தற்கொலை செய்து கொண்டார்.
No comments:
Post a Comment