Monday, March 4, 2019

பிறந்த நாள் வாழ்த்துக்கள் - கார்த்திகா கணேசர்

                                 
                                             

                        வரலாற்றில் வாழ்பவளே!


                 சிங்கத்தின் பார்வை கொண்டவளே!
                 சிரித்து எம்மை மயக்குவளே!
                 அறிவில் தீரா தாகம் தனை
                 தமிழில் ஊற்றித் தருபவளே!

                 தாம் தீம் என்று நடனமும்
                 ச,ரி என்றுசங் கீதமும்
                 கற்றுக் கொண்டகவின் கலைகளும்
                 பெற்றுக் கொண்ட பேறுகளும்

                 புத்தம் புதிதாய் படைத்திடும்
                 மெத்தப் பெரிய நூல்களும்
                 ஞாபக சக்தியும் அனுபவக்கனலும்
                 தூர நோக்கும் துணிச்சல் பார்வையும்

                 கொண்டிலங்கும் காரிகையே
                 சினேக நூலில் அன்பூ தொடுத்து
                 ரசிக மனதில் மகிழ்பூ ரிப்புடனே
                 சூடிக் களிக்கும் சுடர் கொடியே

                 சூட்டி மகிழ்ந்தன் பாமாலை உனக்கு
                 வாழ்க நீ! என்றும் வாழிய நீ!!
                 நட்பின் இலக்கணமே! கடைந்த நல்லமுதமே!
                 வரலாற்றில் ஒரு கல்லை எடுத்துப் போட்டவளே!


                 அங்கும் நீ வாழ்வாய்! வாழிய நீ!
                 அங்கும் வாழிய நீ! என்றும் நீ வாழ்வாய்!!


வாழ்த்துப் பூ சொரிந்து
வாழ்த்துகிறேன் மகிழ்ந்து! இது உன் தோழி யசோ.

No comments:

Post a Comment